Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

மூடிக்கொள்ளும் தமிழ் தறுதலை ஊடகங்கள்

$
0
0

 வலைத்தளங்களில் வேறு எவருமே அதிகம் பேசாத விவாதிக்கப்படாத ஆனால் அதிமுக்கியமாக  இந்தியர்கள் நிச்சயம் அறிந்துகொள்ளவேண்டிய விஷயங்களை பிறர் அறிய தீரத்துடன் வழக்கும் ஸ்டான்லி ராஜனுக்கு வாழ்த்துக்கள். பெருமையாக இருக்கிறது இவைகளை படிக்க. 

திமுக, அஇஅதிமுக ஸ்டாலின், எடப்பாடி ,கொரோனா  இவைகளோடு மூடிக்கொள்ளும் தமிழ் தறுதலை ஊடகங்கள்  நாட்டின் அதிமுக்கிய மான விஷயங்களை பேசுவதே இல்லை. பேசினால் மோடிக்கு  பெருமை வந்துவிடுமாம். 


கடந்த 10 நாட்களாக இந்தியா சீன எல்லையில் செய்த அதிரடி காரியங்கள் மெல்ல வெளிவருகின்றன‌

இந்தியாவின் அதிரடி சீனா சற்றும் எதிர்பாரா அளவில் இருந்திருக்கின்றது, தவறான கணக்கிட்டு வந்த சீனா மிகபெரும் திகைப்பில் இருக்கின்றது.

இந்தியா ஒரு காலமும் எல்லை தாண்டாது என நம்பியிருந்த சீனாவின் மண்டையில் தட்டிவிட்டு லடாக்கின் மகா முக்கிய இடத்தை பிடித்து கொண்டது இந்தியா. இனி அங்கிருந்து சீன நடமாட்டத்தை எளிதில் கண்காணிக்க முடியும்

அந்த சிகரங்கள் மகா உயரமானவை, கூடவே சீன கண்காணிப்பும் இருந்தது

அங்கு தன்னை இந்தியா ஏமாற்றி கைபற்றியது சீனாவுக்கு பேரதிர்ச்சி , அதைவிட முக்கியம் சீனாவின் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை இந்தியா அசால்ட்டாக ஏமாற்றி குழப்பி அடித்தது.

இதனால் மிகசிறந்த தொழிநுட்பம் இந்தியாவிடம் உள்ளது என கருதும் சீனா அஞ்சி குழம்பிற்று, அதன் பின்னும் அந்த மலைசிகரங்களை கைபற்றும் முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டன‌

ஆம் அறிவிக்கபடா சிறிய யுத்தமொன்றில் தன் பலம் சரிவதை உணர்ந்துவிட்ட சீனா, இனி லடாக்கில் தன் ஆட்டம் செல்லுபடியாகாது என கருதி அருணாசல பிரதேசம் பக்கம் வம்பிழுக்க வந்துவிட்டது

அது அவர்கள் ஏற்கனவே வலுவான பகுதி என்பதால் அங்கு தங்கள் கை ஓங்கும் என கருதி வந்தது, அங்கும் அவர்கள் நினைத்தபடி ஆடமுடியவில்லை

இந்தியாவின் மிக பலமான அதிரடியும் அது காட்டும் உறுதியும் சீனாவினை பின்வாங்க வைத்துவிட்டன, சும்மா உறுமினாலும் இப்பொழுது சமரசத்துக்கு வந்துவிட்டது அந்நாடு

நாளை சீனாவோடு ஜெய்சங்கர் பேசபோகும் பேச்சுத்தான் கடைசி பேச்சு எனும் அளவில் இந்திய கடுமை இருக்கின்றது

நேரடியாக இந்தியாவோடு பேசவில்லையே தவிர ரஷ்யா ஊடாக பேச்சுக்கள் நடக்கின்றன, ரஷ்யா தன் எல்லையில் உள்ள இருபெரும் நாடுகளின் பஞ்சாயத்தை தன் முன் நடத்தி அதன் வல்லரசு இமேஜை தக்க வைத்து கொண்டது

டிரம்ப் என்பவர் மைக் டெஸ்டிங் போல "ஹலோ நான் சமரசத்துக்கு பஞ்சாயத்துக்கு வரட்டுமா?"என கேட்டு கொண்டிருந்த நிலையில் பஞ்சாயத்து ரஷ்யா கைக்கு சென்றதில் அவர் அப்செட்

டிரம் வலிய வந்தும் இருநாடுகளும் டிரம்பை அழைக்கவில்லை, ஆனால் புட்டீன் அழைக்காமலே ஓடி போய் நிற்பதில் டிரம்பர் கடுப்பாகிவிட்டார்

ஆனாலும் இந்தியா எம் நண்பன் என அவர் தொடர்ந்து இந்தியாவுக்கு உதவி கொண்டிருக்கின்றார், இதன் அவருக்கும் இந்தியா இப்பொழுது அவசர தேவை

ஆக லடாக்கில் குறிப்பிடதக்க வெற்றியினை பதிவு செய்த இந்தியா இப்பொழுது அருணாசல பிரதேசத்தில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது

சீனா வெறும் வெற்று பிம்பம், அங்கு பலமோ பெரும் நுட்பமோ எதுவுமில்லை அது வெறும் சவுடால் நாடு என உலகுக்கு சொல்லிவிட்டது இந்தியா

1962ல் இருந்து 67 வரை தொடர்ந்து அடிபட்டும் அதன் பின் சீனா என்றாலே ஒருவித அச்சம் எனும் நிலையில் இருந்த இந்தியா, இப்பொழுது மோடி தலமையில் மிகபெரிய எழுச்சியுடன் திருப்பி அடித்திருக்கின்றது

இந்தியா ராணுவ ரீதியாக அடித்த அடியினை விட, நுட்பமாக அடித்த இன்னொரு அடிதான் கிளாகிக்

அதாவது இந்திய ரானுவத்தில் திபெத்திய வீரர்கள் உண்டு, திபெத் அகதிகளை கொண்டு உருவாக்கபட்ட அணி அது

அதைத்தான் லடாக் எல்லையில் சீன ஆக்கிரமிப்பு பகுதியினை மீட்க அனுப்பியது, அதில் ஒருவர் இறந்தார்

இதை தொடர்ந்து திபெத் பகுதியில் சலசலப்பு ஏற்பட, அதாவது திபெத்தியரை சீனர் கொன்றுவிட்டனர் எனும் ஒரு கோபம் எழும்ப சீனா மிரண்டு விட்டது

இந்தியா இனி திபெத் சிக்கலை கிளப்பும், அது அமெரிக்காவுக்கு கொண்டாட்டமாகிவிடும் என பல கணக்குகளை இட்ட சீனா இப்பொழுது லடாக்கில் இருந்து விலகும் நிலைக்கு வந்தாயிற்று

பனிகாலம் தொடங்கிவிட்ட நிலையில் அவர்களுக்கும் வேறு தெரிவு இல்லை, ஆக மகா முக்கிய இடங்களை பிடித்ததுடன் இப்பொழுது லடாக்கில் வெற்றிகொடி நாட்டி நிற்கின்றது இந்தியா

இந்தியா குளிருக்கு தாங்கும் எல்லா ஏற்பாடுகளையும், ஏகபட்ட குளிர்கால வசதிகளையும் செய்துவிட்டுத்தான் அங்கு நிற்கின்றது, சியாச்சினில் பணியாற்றிய அனுபவம் உள்ளதால் நம் வீரர்களுக்கு அங்கு சிக்கல் இல்லை

பிரச்சினை இப்பொழுது அருணாச்சல பிரதேசம் பக்கம் நகர்கின்றது, அங்கும் சீனாவுக்கு முகத்தில் குத்துவிழும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

பொதுவாக யுத்தத்தில் மனோபலம் முக்கியம், இந்தியாவுக்கு அது கூடிற்று, சீனாவுக்கு அது நொறுங்கிற்று

ஆக யுத்த நிலையில் முன்னணியில் அல்ல, ஓசைபடாமல் பெருவெற்றி பெற்று நிற்கின்றது இந்தியா. இந்து மிகபெரும் விஷயம், வரலாற்று சாதனை

வரலாறுகளை படைக்கும் மோடியின் மிகபெரும் வெற்றி இது

இந்தியா மீட்டிருப்பது முந்தைய அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்த பகுதி 1950களில் இருந்தே சீன எச்சரிக்கைக்கு பயந்து இந்தியா செல்லாமல் இருந்த பகுதி

அதைத்தான் முதன் முறையாக கைபற்றி தன் கட்டுபாட்டில் கொண்டுவந்திருக்கின்றது தேசம்

சீனாவே பின்வாங்கிய அச்சத்தில் சகலத்தையும் பொத்தி கொண்டு நிற்கின்றது பாகிஸ்தான். ஆம், இந்திய ராணுவம் மிக பெரும் நுட்பங்களுடன் உச்சத்தில் நிற்கின்றது, அந்த நுட்பம் வெற்றியினை கொடுக்கின்றது

இமயமெங்கும் இந்தியாவின் கொடி கம்பீரமாக பறக்கின்றது, சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக பறக்கின்றது





Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>