புதிய கல்விக்கொள்கை மட்டும் அல்ல இருக்கும் கல்விக் கொள்கை என்று ஒட்டுமொத்தமாகப் பேச விவாதம் செய்ய நான் தயார். சீமான் எந்த மேடைக்கு வருகிறார் என்று கேட்டு சொல்லுங்கள். வந்து வசனம் பேச கூடாது - ஆதாரங்கள் புள்ளி விவரங்களுடன் உண்மையைப் பேசி விவாதம் செய்தல் வேண்டும்.
காசு இல்லை என்று தான் எழை மக்கள் அரசுப் பள்ளிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கிறார்கள் ;
காசு இருப்பதால் தான் அரசு பள்ளியில் வேலை செய்தாலும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை CBSE பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.
காசு இருப்பதால் தான் அரசு பள்ளியில் வேலை செய்தாலும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை CBSE பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.
அரசு 20,000 கோடி செலவு செய்து அரசு பள்ளிகளை நடத்துவதை விட்டு - அரசுப் பள்ளிகளை அப்படியே CBSE பள்ளியாக மாற்றி தரம் இல்லாத ஆசிரியர்களை வீட்டு அனுப்பிவிட்டு அந்த மொத்த பள்ளிக் கூடங்களையும் தனியாரிடம் நன்கு அனுபவம் உள்ள தனியார்ப் பள்ளி நிர்வாகிகளிடம் கொடுத்துவிட்டு - குழந்தைக்கு 35,000ரூபாய் கொடுத்துவிட்டால் போதும்.
அரசுக்கும் தலைவலி இல்லை ; மக்களுக்கும் தரமான சமமான கல்வி கொடுத்துவிடப் போகிறோம். எதற்கு அரசுப் பள்ளி , அரசு ஆசிரியர்கள்??? இலவச கல்வி தனியார் மூலம் கொடுத்துவிட்டுப் போகிறேன்.
இதை முழு புள்ளி விவரமாக நான் பேசத் தயார்.
சும்மா மொழி உணர்வைத் தூண்டி தூண்டி அரசியல் நாடகம் நடத்துவது திராவிட கட்சிகளும் இந்த முழு முட்டாள் சீமானும் தான்.
ஏழைகளுக்கு இலவச கல்வி கொடுக்க வேண்டும் என்று கேட்பது நியாயமே ஆனால் அதை அரசுப் பள்ளிகளில் வழியே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. சூரியா குழந்தை படிக்கும் பள்ளிக்குச் சென்று ஏழை குழந்தை படிக்கட்டும் நான்(அரசு) அதற்குக் கட்டணம் கட்டிவிட்டுப் போகிறேன். அரசுப் பள்ளி நடத்தினாலும் அதே செலவு தானே எனக்கு. பின் எதற்குக் கட்டாயம் இந்த அரசுப் பள்ளிகள்.
அனைத்து குழந்தைகளையும் CBSE பாடத்திட்டத்திற்கு மாற்றுங்கள்.. உங்கள் குழந்தைக்கு என்ன கல்வி கிடைத்ததோ அதே கல்வி அனைத்து குழந்தைக்கும் கிடைக்க வேண்டும் என்று சிந்தியுங்கள். நான் சொல்வது புரியும்.
-மாரிதாஸ்