Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

உங்கள் வேலையை மோடி செய்துவிட்டார்...!

$
0
0

உங்கள் வேலையை மோடி செய்துவிட்டார்...!

* இதற்கான பணத்தை இந்தியாவிடம் கொடுங்கள்
* இம்ரான்கானுக்கு இமாம் தவ்ஹிதி ‘அட்வைஸ்’

கராச்சி

பயங்கரவாதிகளை அழித்ததற்காக இந்தியாவுக்கு அற்கான பணத்தை கொடுக்க வேண்டும் என இமாம் மொஹம்மத் தவ்ஹிதி தெரிவித்துள்ளார்.

‘டுவிட்டரில்’ மிகப் பிரபலமானவர் இமாம் மொஹம்மத் தவ்ஹிதி. இவர் இஸ்லாமிய மதக் கோட்பாட்டாளர். அதே நேரம், உண்மையான இஸ்லாம் மார்க்கம் என்ன போதிக்கிறது என்பதை கூட்டங்களில் சொல்லி வருபவர். இவரது பேச்சு இஸ்லாமிய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சீர்திருத்த இமாம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இமாம் மொஹம்மத் தவ்ஹிதி, இன்றைய டுவிட்டரில் இந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்து சில கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், பாகிஸ்தான் தனது நாட்டில் பயங்கரவாத பிரச்னைகள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தது. இதனால் பயங்கரவாதப் பிரச்னையை எதிர்கொள்ள பில்லியன் டாலரில் வெளிநாட்டு பணத்தைப் பெற்று வந்தது. ஆனால், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் முற்றிலும் தோல்வி அடைந்தது. தவிர சுதந்திரத்திற்கு பின்னரே ராணுவ அதிகாரிகள் வசம் பிரதமர் சிக்கி வருகிறார். தற்போது ராணுவ அதிகாரிகள் கையில் பாகிஸ்தான் இல்லை. பாகிஸதான் நாடு பயங்கரவாதிகள் வசம் சென்று விட்டது.

இந்த நிலையில்தான் பாகிஸ்தானின் பிரச்னையை இந்தியா இன்று அதிகாலை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மூலம் தீர்த்து வைத்துள்ளது. அது பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளைப் போட்டு, அனைத்தையும் அழித்துவிட்டது. பாகிஸ்தான் இதற்காக பில் தொகையை இந்தியாவுக்கு செலுத்த வேண்டும். மேலும் இந்தியப் பிரதமர் மோடி, பாகிஸ்தானை மாடிபையிங் செய்துள்ளதாக தெரிவித்தார்

இந்த நேரத்தில் ஐ.நா.சபை இந்தியா பாகிஸ்தான் பிரச்னையில் தலையிடக் கூடாது. பாகிஸ்தானின் பயங்கரவாதம் இந்தியர்களை பல்லாண்டுகளாக வதைத்து வந்துள்ளது. அண்மையில் 44 இந்திய வீரர்களைக் கொன்றுள்ளது. பாகிஸ்தானின் மண் ஒரு காலத்தில் இந்தியாவுடன் இருந்தது. எனவே, பிரச்னை எங்கே இருக்கிறது என்று இந்தியாவுக்குத் தெரியும். அதை எப்படி தீர்ப்பது என்பதும் பிரதமர் மோடிக்கு மிகத் தெளிவாக தெரியும். இவ்வாறு இமாம் மொஹம்மத் தவ்ஹிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

செய்தி மற்றும் படம்: தமிழ்செல்வி

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>