Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

புலிசுறா

$
0
0
Stanley Rajan

தமிழ்நாட்டில் மிக சாதாரண விஷயத்தை அதாவது சன்னிலியோன் என்றால் ஆபாச வீடியோக்காரி, ஆட்டோ சங்கர் என்றால் கொலைகாரன் அப்படி ஈரோட்டு ராம்சாமி என்றால் இந்து கடவுளை அடித்திருப்பார் என கடந்து செல்லவேண்டிய இயல்பான விஷயத்தை ஏன் இப்படி இழுக்கின்றார்கள் பத்திரிகை நிறைய அதையே ஏன் வருமாறு பார்க்கின்றார்கள் என்றால் விஷயம் வேறுமாதிரியானது
இதோடு தஞ்சாவூர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு என இன்னும் அழுத்தமாக தஞ்சாவூர் கோவிலையே பிரதானபடுத்தி தஞ்சையின் இன்னும் சில செய்திகளை மறைக்கின்றார்கள் என்றால் அதிலும் விஷயம் இல்லாமல் இல்லை
ஆம், வழக்கம் போல மத்திய அரசு செய்யும் மிக முக்கியமான விஷயத்தினை மறைக்கின்றார்கள், தமிழக மக்கள் பாஜக அரசின் முக்கிய திட்டத்தை செயல்படுத்துவதை தெரிந்து கொள்ள கூடாது என விரும்புகின்றார்கள்
யார் விரும்புகின்றார்கள் என்றால் தமிழ்நாடு என்றும் திராவிட மயக்கத்தில் இருக்க வேண்டும் என நினைக்கும் திமுக, அதிமுக இன்னபிற கோஷ்டிகளே, இதன் பின்னணியில் சில வெளிநாட்டு உத்தரவும் இருக்கலாம் காரணம் திமுக தலமை சொந்தமாக யோசித்து தஞ்சாவூர் கோவிலை சீண்டியிருக்காது
ஆம் மத்திய அரசு தஞ்சாவூர் விமானபடை தளத்தை மிக உயரத்துக்கு எடுத்து செல்கின்றது, அது உலகின் மிக பரபரப்பு செய்தியாகிவிட்டது
இந்திய விமானபடையின் மிகபெரும் பலம் அந்தமான், அங்கிருந்து ஆசியா முழுமையும் கட்டுபடுத்தும் படி விமானமும் ஏவுகனையும் இயக்கலாம்
அதன் அடுத்த இடமாக தஞ்சாவூரை பிரமோட் செய்துவிட்டது மத்திய அரசு, உலக அரங்கில் தஞ்சை விமான நிலையம் இடம் பிடித்துவிட்டது பாகிஸ்தான் முதல் இஸ்ரெல் அமெரிக்கா வரை தஞ்சாவூரை நோக்க தொடங்கிவிட்டன‌
ஆம் அப்படித்தான் சுகோய் விமானத்தை நிறுத்தி அதற்கு பெயரும் இட்டிருகின்றார்கள் , தஞ்சை விமான நிலைய பெயர் என்ன தெரியுமா?



புலிசுறா
ஆம் தமிழனின் புலிகொடி பறந்த இடத்தில் சோழரின் பாரமப்ரிய புலியினை சுமந்து புலிசுறா என பெயரிட்டிருக்கின்றது மத்திய அரசு
இத்தோடு சூலூருக்கு அடுத்து தஞ்சையில் தேஜஸ் விமானத்தியும் நிறுத்த போகின்றது
இன்னமும் அடுத்தவருடம் ரபேலும் வரலாம் என்கின்றார்கள், இதை நாம் முன்பே சொல்லியிருந்தோம்
ஆக மிகபெரும் ராணுவவிமான தளமாக தஞ்சை உருவெடுத்துகொண்டிருக்கின்றது, இதனால் பாதுகாப்பு ஒருபக்கம் வலுபடுத்தபடும், தஞ்சை பக்கம் மத்திய அரசு உலாவினால் ஏகபட்ட நலன்கள் இங்கு வரும்
காராஜர் காலத்துக்கு பின் இம்மாதிரியான காட்சிகள் நடக்கின்றன, இந்திய விமானபடை ஒருவித வேகத்தில் உள்ளது, வாஜ்பாய் காலத்துக்கு பின்பு 10 வருட காலம் விமானபடை மேம்படுத்தபடவில்லை
பழையதை கழித்தார்களே ஒழிய புதிது வாங்கவில்லை இது ஒருவித தேக்கத்தை ஏற்படுத்திற்று
காங்கிரஸ் இருந்தாலே உருப்படாது இதில் திமுகவும் இருந்தால் எப்படி உருப்படும்
இப்பொழுது துரிதகதியில் மேம்படுத்துகின்றார்கள் அப்படி வந்ததுதான் தஞ்சை விமானதள புத்துயிரும் சுகோயும் தேஜசும்
முன்பு 10 ஆண்டுகள் திமுக மத்திய அரசில் இருந்தது, அப்பொழுது சன்டிவிக்கு புது புது சேனல்கள் வந்தன இதர மொழியில் வந்தது
திமுகவுக்கு கலைஞர்டிவி வந்தது, இன்னும் என்னவெல்லாமோ வந்தது திமுக பிரமுகர்களுக்கு புது புது கம்பெனிகள் வந்தன, கனிமொழிக்கு ராயல் பர்ச்னிச்சர் கடை வந்தது
ப.சிதம்பரம் குடும்பத்துக்கு என்ன வந்தது என்பது பற்றி உங்களுக்கே தெரியும்
மோடி ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு காவேரி உருப்படியாக வந்தது, காணாமல் போன தஞ்சை சிலைகள் வந்தன‌
முன்பு தஞ்சாவூரில் இருந்து சோழன் கிழக்காசியா முழுக்க ஆட்டி படைத்து தஞ்சையினை கிழக்காசியாவினை மிரட்டும் தலைநகராக வைத்திருந்தது போல இன்று கிழக்காசியாவினை மிரட்டும் தஞ்சாவூராக மோடி அரசு அதை மாற்றிகொண்டிருக்கின்றது
அவ்வகையில் மோடி இரண்டாம் ராஜராஜ சோழனாகின்றார்
இது தமிழக வரலாற்றில் மாபெரும் திருப்பம், பண்டைய தமிழ்நகரமும் பாரம்பரியமும் மிக்கதான தஞ்சாவூரை மோடி உலகில் மின்ன வைக்கின்றார்
இதை தமிழன் தெரிந்தால் திமுகவினை மதிப்பானா? தாடிக்காரன் ராம்சாமியினை மதிப்பானா? இல்லை டெல்லி எதிர்ப்பு அரசியல்தான் செய்யமுடியுமா?
இதனால் ரஜினிக்கு நன்றி சொல்லி பன்றியாய் கறுப்பு சட்டையுடன் வருகின்றார்கள், தஞ்சை கோவிலில் தமிழ் வேண்டும் என கொடிபிடிக்கின்றார்கள்
ஆனால் அதே தஞ்சையினை மத்திய அரசு பெரும் உலகபுகழ் நகரமாக உருவாக்குவதை மறைக்கின்றார்கள், ஊடகமும் துணை செல்கின்றன‌
மாமல்லபுரத்துக்கு அடுத்து தஞ்சாவூர் உலக புகழ் பெறுகின்றது, மோடி அசத்துகின்றார்
இதை எல்லாம் சொல்லவேண்டியது தமிழக பாஜக, நிச்சயம் இது அவர்கள் அடித்து ஆட வேண்டிய இடம், ஆனால் அவர்களோ அடுத்த தலமை யார் என குடுமிபிடி சண்டையில் இருக்கின்றார்கள்
பின் எங்கிருந்து தாமரை மலரும்?
தமிழக பாஜகவினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், அவர்களால் இங்கு ஒருகாலமும் கட்சி வளர்க்கமுடியாது போலிருக்கின்றது, திமுக அதிமுகவின அடிமைகள் அவர்கள், அவர்கள் இருக்கும் காலம் வரை இங்கு ஒரு மாற்றமும் வாரா..
அவர்கள் அரசியல்வாதிகள் அப்படித்தான்
நாம் ஒரு இந்தியனாக இந்திய அரசின் நல்முயற்சியினை வாழ்த்தும் இந்திய தமிழனாக விஷயத்தை சொல்லிவிட்டோ இனி உங்கள் பாடு
கவனியுங்கள் தமிழகத்தின் சாலை முதல் குப்பைமேடு வரை அண்ணா பெரியார் என பெயின்ட் அடித்தது திமுக‌
முதல்முறையாக பண்டைய அடையாளங்களை மீட்டு கப்பல்கட்டு தளத்துக்கு கோவாவில் சோழன் பெயரை சூட்டியது மோடி
மாம்மல்லபுர பல்லவ அடையாளத்தை மீட்டு அதை உலகறிய செய்தது மோடி
இப்பொழுது தஞ்சாவூர் தளத்தை பலபடுத்தி உலகதரமாக்கி சோழனின் புகழ் நிலைக்கும் வண்ணம் "புலி"சுறா என பெயரிட்டிருப்பதும் மோடி
இனி தஞ்சை கோவிலில் சமஸ்கிருதத்தில் அடுத்து குஜராத் மொழியில்தான் மந்திரம் சொல்லவேண்டும், சல்லிவோட்டுக்கு பிரயோசனம் இல்லையென்றாலும் தஞ்சையின் காவேரி முதல் சிலை, பாரம்பரியம் வரை அவர்தான் மீட்டெடுக்கின்றார்
நல்ல இந்திய தலமை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி விளங்கும் மோடிக்கு, இரண்டாம் ராஜராஜ சோழனுக்கு தமிழனாக கோடி நன்றிகள்
வாழ்க நீ எம்மான்...

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>