Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

சுத்த பேத்தல்வாதம்.

Previous: உலகமே அரண்டு தொழில்துறையே முடங்கி, சரி என்ன பணமழிந்தாலும் பரவாயில்லை உயிர்கள் காக்கபட வேண்டும் என கடும் முனைப்பில் இறங்கியிருக்கின்றது ஒவ்வொரு நாடும் யாரும் வீட்டை விட்டு வரவேண்டாம், லாக் டவுன் செய்திருகின்றோம் கூட வேண்டாம், நாடு முக்கியம் மக்கள் முக்கியம் என கதறிகொண்டிருக்கின்றது மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து பில்லியன் டாலர் நஷ்டம் என்றாலும் பரவாயில்லை என ஒத்துழைக்கின்றார்கள் இங்கே தமிழகத்தில் ஒரு கூட்டம் சி.ஏ.ஏ எதிர்ப்பு கூட்டம் நடத்தி சிறையினை நிரப்புமாம் ஒவ்வொரு நாடும் சிறைகைதிகளும் முக்கியம் என சொல்லி விடுவிக்கின்றது, சிறை நோயினை பரப்பும் என அஞ்சுகின்றது ஆனால் இந்த மாபெரும் அறிவாளிகள் கும்பலாய் நிரப்புவார்களாம் இவர்களுக்கு கூட்டத்தில் நோய்வரும் என தெரியுமா என்றால் தெரியும், பரவும் என தெரியுமா என்றால் தெரியும் ஆனாலும் ஏன் வரிந்து கட்டுகின்றார்கள் எல்லாம் தற்கொலைபடை பயிற்சி இப்படித்தான் இருக்கும், நோயினை காவலருக்கும் சிறைவாசிகளுக்கும் பரப்பி நாட்டை குழப்புவோம் எனும் மகா விபரீத திட்டம் கொஞ்சமும் அறிவில்லை, திட்டமில்லை, நிதானமில்லை இந்த கோஷ்டிக்கு தனிநாடு கொடுத்தால் எப்படி இருக்கும்? பாகிஸ்தான் ஆப்கன் வங்கம் போலத்தான் இருக்கும், இதில் இந்தியாவிலும் இவர்களை கொஞ்ச வேண்டுமாம் பிரிட்டன் ஒரு சட்டம் இயற்றுகின்றது, அரசின் சட்டத்தை மீறி நோய்காலத்தில் நடமாடினால் பத்தாயிரம் பவுண்ட் அபராதமாம் இங்கு பணம் எல்லாம் வேண்டாம், எல்லாம் கனராபேங்கில் இருந்து டெப்பாசிட் எடுத்து வைத்திருகின்றது மாறாக தான் கெட்டாலும் நாட்டை கெடுக்க வேண்டும் என வெறியோடு கிளம்பியிருக்கும் இந்த கூட்டத்தை கப்பலில் ஏற்றி நடுகடலில் தள்ள வேண்டும் ஒருகாலமும் இவர்களால் இங்கு நன்மை விளையாது, விடமாட்டார்கள், அடித்து விரட்டி நாட்டை காப்பதே அறிவுடமை இந்த கோஷ்டி தமிழகத்தில் 40 இடங்களில் ஆர்பாட்டம் நடத்துகின்றதாம் தடையினை மீறுமாம் 40 இடங்களிலும் நோய்பரப்பினால் யார் பொறுப்பு? நிச்சயம் திமுக கோஷ்டிதான் பொறுப்பு வீடியோவில் வந்து குரனோவ் விளக்கம் கொடுக்கும் திமுக தலைவர் இவர்களை ஏன் கண்டிக்கவில்லை தடுக்கவில்லை? அவர்கள் போராட்டம் என்றால் ஓடும் திமுக தலமை நோய்பரப்பும் இக்கூட்டத்தை கண்டித்தால் என்ன? பழனிச்சாமி அரசு மற்ற மக்களை காப்பாற்ற ராணுவத்தை அழைத்தாவது இவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யட்டும், இவர்களுக்கு பின்புலத்தில் இருக்கும் திமுகவினை இனியாவது மக்கள் உணரட்டும் 40 இடங்களை பாருங்கள் அறிவாலயம், கோபாலபுரம், வேளச்சேரி, சிஐடி காலணி என திமுக இடங்கள் ஏதும் இருக்காது, அவ்வளவு புரிந்துணர்வு மற்றும் பாதுகாப்பு
$
0
0

Sundar Raja Cholan

1949 ல் துவங்கப்பட்ட திமுக பெரிய மக்கள் புரட்சி செய்து 1967 ல் ஆட்சியை பிடித்ததாக சொல்கிறார்கள்..இதெல்லாம் சுத்த பேத்தல்வாதம்.
1952 ல் காங்கிரஸ்ஸை எதிர்த்து களம் கண்ட ராமசாமி படையாட்சி,மாணிக்கவேல் நாயக்கர் இருவரும் 25 தொகுதிகளை கைப்பற்றினர்.இவர்கள் இருவரும் ராஜாஜி மற்றும் காமராஜரோடு 1957 க்குள் சமரசம் செய்து கொண்டு அமைச்சரவை பெற்று காங்கிரஸ்ஸோடு ஐக்கியமாகிவிட்டார்கள்..
இந்த வெற்றிடத்தை நிரப்பி 1957ல் வடமாவட்டங்களில் அதாவது தொண்டை மண்டிலத்தில் எழுந்த இயக்கம்தான் திமுக.அதனுடைய வாக்காளர்கள் தென்மாவட்டத்தவர்களின் ஆதிக்கம் பெற்ற காங்கிரஸ்ஸை எதிர்த்தவர்களும்,தங்கள் எண்ண ஓட்டத்திற்கு விரோதமாக காங்கிரஸ்ஸிடம் சமரசம் செய்து கொண்ட ராமசாமி படையாட்சி,மாணிக்கவேல் நாயகர் எதிர்ப்பளர்களும்தான்.
1961 ல் தலித்துகளிடம் காமராஜருக்கு இருக்கும் நற்பெயரை தாங்கள் சுவீகரித்துக்கொள்ள அவருக்கு சிலை வைத்து தங்கள் தலித் தலைவர்களை தக்க வைத்துக்கொள்ளும் நிலைதான் திமுகவுக்கு இருந்தது.
காமராஜர் - ராஜாஜி மோதல் என்பது இன்றைய எடப்பாடி - டிடிவி மோதலாக பொருத்தினால் உங்களுக்கு எளிமையாக புரியும்.நீங்கள் தலைவர்களின் தன்மையை இதனோடு பொருத்தி தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.அரசியல் சூழ்நிலை மட்டும்.
அதிமுகவை தன் வசம் வைத்துக்கொள்ள,அதிகாரத்திற்கு தனக்கு சவால் விடக்கூடிய,எப்போது வேண்டுமானாலும் கட்சியை கைப்பற்ற வாய்ப்பிருந்த தினகரனை தனிமைப்படுத்தும் அரசியலைத்தான் எடப்பாடி பழனிசாமி செய்தார்.2019 தேர்தலில் அவர் யோசிக்காமல் இறங்கிப் போய் இந்த கூட்டணியை போடக் காரணமே டிடிவியை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கம்தான்.திமுக வெற்றி பெறுவதை பற்றி அவர் கவலைப்படவில்லை..
இதே போல காமராஜர் திமுகவால் பெரிய வெற்றியெல்லாம் அடைய முடியாது.ஆனால் கம்யூனிஸ்ட்,ராஜாஜி போன்றவர்கள் எழுந்து வராமல் இருக்க திமுக உதவும் என்று அதை குறைத்து மதிப்பிட்டதுதான்.
1962 ல் திமுகவின் பெரிய தலைவர்கள் அண்ணா உட்பட அனைவரும் தோற்கடிக்கப்படுகிறார்கள் கருணாநிதி தவிர்த்து.ஆனால் திமுக மக்களிடம் செல்வாக்கு பெற்று 50 இடங்களை பெறுகிறது.இதை புரிந்துகொண்ட ராஜாஜி தெளிவாக 1962 ல் இருந்து திமுகவை வழிநடத்துக்கிறார்.
1963 ல் பெரியார் சொல்கிறார்,'தலித்+சிறுபான்மையினர்+ராஜாஜி+கண்ணீர்த்துளிகள்(திமுக) ஒன்றாக சேருவது தெரிகிறது இதை காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும்"என தெளிவாக குறிப்பிடுகிறார்..
முத்துராமலிங்கத்தேவர் மரணம்,ஆதித்தனார் vs காமராஜர் மோதல் என எல்லாவிதமாக உள்ள காங்கிரஸ் எதிர்ப்பு சக்திகளையும்
1967 ல் ஒரு தளத்தில் கட்டியெழுப்புகிறார் ராஜாஜி.பத்தாதற்கு காமராஜர் டெல்லி போய்விட்டார்.அடுத்து பக்தவச்சலம் முதல்வர்,ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அதனால் துப்பாக்கி சூடு,நேரு மற்றும் சாஸ்த்திரி மறைவு என அடிமேல் அடி. இதுதான் திராவிடத்தின் வெற்றிக்கோட்பாடு வளர்ந்த விதம்..அதற்கும் மேல் எம்ஜிஆர் துப்பாக்கி சூடு,எஸ்எஸ்ஆர் போன்ற திரையுலக ஆதரவு இவையும்.
திமுகவை மக்கள் கொள்கை வழி ஏற்றுக்கொண்டார்களா? இல்லை.ஏனென்றால் திகவை போலவே திமுகவுக்கு நியாயமான எந்த அடிப்படை கொள்கையும் கிடையாது.சந்தர்ப்பவாதமும் பிரிவினையும்தான் அதன் அடிப்படையே.
யார் மாற்று சக்தி? அதுதான் வெற்றிக் கோட்பாட்டின் முக்கிய துருப்புச்சீட்டு.

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>