Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

#தடை_அதை_உடை

$
0
0

 தமிழ் மக்களின் பகையழிக்க வல்லான் திருத்தணிகை மலை வள்ளல். வந்து அவனை முதலில் வணங்கி பின்னர் கையில் வேலேந்தி வந்தார் திரு. எல். முருகன். திருத்தணியில் உற்சாகத்துடன் திரண்டனர் மக்கள். வெற்றிவேல் யாத்திரை தொடங்கிய திருத்தணி பை -பாஸ் ரவுண்ட்டான வில் நடந்த நிகழ்ச்சிகளின் சில கணங்கள்.

பாஜக தலைவரும் அவர்தம் குழுவினரும் வருமுன்னரே பொன்ராதாகிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்கள் அங்கே வந்துவிட்டனர். அனைத்துத்தரப்பு வயதினரும், பெண்களும் அதிகம் காணப்பட்டனர். காவி நிறத்தில் பொருத்தமான சட்டை.யுடன் திரு. எல் .முருகன் அவர்களின் வாகனம் அந்த இடத்தை அடையும்போது பெருத்த கோஷங்களும், பூக்களும் அவர்மீது பொழிந்தன. தன் மேல் விழுந்து குவிந்த சாமந்திப்பூக்களை அகற்றிக்கொண்டே தன் வழக்கமான சிரிப்புடன் கைகளில் வேலினைத்தாங்கிக்கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் கைகளை அசைத்து அனைத்தையும் ஏற்றுக்கொண்டார் .
வேல் யாத்திரை அமைப்பாளர் திரு ரவீந்திரன் அதுவரைக்கும் உரையாற்றிக்கொண்டிருந்தார்.முருகன் வந்தவுடன், சி பி .ராதா கிருஷ்ணன், பொன்னார், ஹெச் .ராஜா, அண்ணாமலை ஐபிஎஸ், சி டி .ரவி என அனைவரும் வாகனத்தில் முருகனின் அருகில் இருக்க, ஒவ்வொருவருவரும் உரை நிகழ்த்திச்செல்ல, ஹெச் ராஜாவின் முறை வந்தபோது கூட்டமே ஆர்ப்பரித்தது. அதேபோல அண்ணாமலை ஐபிஎஸ் பெயரை சொல்லி பேச அழைக்கவும் கூட்டம் மிகுந்த உற்சாகத்தில் அதிர வைத்து வியப்பைத்தந்தது. இதெல்லாம் அவர்களை காவல் துறை கைது செய்வதற்கு முன்பாக நடந்த நிகழ்வுகள். ஒரு சம்பவம் இல்லை, ஒரு தள்ளுமுள்ளு இல்லை, சண்டை சச்சரவு இல்லை. அனைத்துத்தரப்பிலிருந்தும் ஆண்களும் பெண்களும் வந்திருந்தனர். குறிப்பாக மிகவும் இணக்கமான சூழலில் , வண்டி வாகனங்களுக்கு எளிதாக வழி விட்டனர்.
ஒரு வேலை இந்த சூழலே திராவிட நாதாரிகளின் வயிற்றில் புளியை கரைக்க வைத்த உளவுத்துறை ரிபோர்ட்டுகளால் கைது நடவடிக்கைகளும், பிரச்சார வண்டியினை போலீஸ் அபகரித்த அடாத செயலும் .நடக்க ஆரம்பித்துள்ளன. ஒன்று நிச்சயம்...... திராவிட நாதரிகளை ஒன்றுவிடாமல் குழிக்குள் தள்ளி மண்ணை போட்டு மூடி , மேலே நடு கல்லையும் வைத்துவிட்டுதான் ஓய்வான் தணிகை மலையான்.

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>