கிருபானந்தவாரியார் பிறந்த நாளுக்கு அரசு விழா : செய்தி
தர்மம் தன்னை நிரூபிக்க அதர்மம் தலைவிரித்து ஆடவேண்டும் என்பது நியதி, அதர்மம் ஆடாத இடத்தில் தர்மத்துக்கு வேலையிராது, காரிருள் இல்லா இடத்தில் விளக்குக்கு தேவை இராது
ஆக திகவின் இம்சைகள் ,திமுகவின் வைரமுத்து உள்ளிட்ட கறுப்பர் கூட்டத்தின் அட்டகாசத்தால் இங்கே இந்துமதம் துளிர்க்கின்றது
அவ்வழியேதான் தைபூசம் அரசு விடுமுறையானது, இப்பொழுது மிக சிறந்த முருக பக்தரும் நாமெல்லாம் கண்ணார கண்ட நாயனாருமான கிருபானந்தவாரியாருக்கு பெரும் சிறப்பு செய்யபட்டிருக்கின்றது
இந்துக்கள் விழித்து கொண்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கான சில துளி சான்றுகள் இவை
இந்துக்களின் பலமும் அவர்களின் சக்தியும் பாரம்பரியமும் பெருமையும் மிக பெரியது, அந்த மாபெரும் சக்தி தூங்கி கொண்டிருந்தது அதை தட்டி எழுப்பிய திமுகவினருக்கும் அவர்கள் அடிபொடிகளுக்கும் வாழ்த்துக்கள்.
கிருபானந்தவாரியாரை முன்பொரு காலத்தில் வீடுபுகுந்து தாக்கிய திக திமுகவினருக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள்
உள்ளன்போடு சாக்கிய நாயனார் வீசிய கல்லெல்லாம் சிவனுக்கு பூவாய் மலர்ந்ததாம், அப்படி கிருபானந்த வாரியார் பெருமை விளங்க பக்தி கல் வீசிய அந்த சாக்கியர்களுக்கும் வாழ்த்துக்கள்
விபூதி பூசாத ஸ்டாலினுக்கும், வேல் வங்காத கனிமொழிக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள், ஆம் அவர்களால் தழைக்கின்றது இந்துமதம்.
Stanley Rajan