Stanley Rajan
தாகூர் என்பவன் இந்நாட்டுக்கு என்ன செய்தான் என்றால் இந்திய விடுதலைக்கு என்ன செய்தான் என்றால் ஒன்றுமே இல்லை
அவன் நேரு போல தன்னை ஒரு அதிமேதாவியாக கருதி கொண்டான் அதை வெள்ளையன் அங்கீகரிக்க வேண்டும் என ஏங்கி திரிந்தான், அதில் அவன் இந்திய விடுதலை பற்றியோ இச்சமூகத்தின் இந்த கலாச்சாரத்தின் தாத்பரியம் பற்றியோ அதை மீட்டெடுக்க வேண்டும் என்றோ கொஞ்சமும் சிந்தித்தவன் அல்ல
கால்டுவெல் கண்டெடுத்த திராவிடம் எனும் வார்த்தையினை வெள்ளையன் காலத்தில் அகில இந்தியா எங்கும் எடுத்து சென்றவன் தாகூரே.
ஆம், தென்னாட்டை திராவிடம் என சொன்னவன் அவனே, கால்டுவெல் அந்நியன் அவன் உளறுவான் இந்த மேதாவிக்கு எங்கே போயிற்று அறிவு?
எப்படி வந்தது திராவிடம்?
ஒரு நாட்டுக்கு சொந்தபெயர் ஒன்று இருக்கும் அந்நியர் அழைக்கும் பொழுது வேறுபெயரில் அழைப்பார்கள் அதனால் அந்தபெயரே நிலையானது என்றாகாது
ஹாலந்து நாடு டச்சு என்றும் அழைக்கபடும், ஜெர்மனிக்கு ஐரோப்பாவில் வழங்கபடும் பெயர் வேறுமாதிரியானது
தாய்லாந்தின் பழைய பெயர் ஷியாம், பர்ம்மா இன்று யாங்கூன் ஆனது, 1970க்கு முன்புவரை இலங்கை என்பது சிலோன் தேசம்
அப்படி தமிழகத்தை ஆளாளுக்கு பெயரிட்டார்கள் ஜம்பு தீவு என்பார்கள், மெட்ராஸ் ஸேட் என்றார்கள் இன்னும் ஆளாளுக்கு அந்நியர் பெயரிட்டார்கள்
சங்க இலக்கியம் "வட வேங்கடம் முதல் தென்குமரிவரை தமிழ்கூறும் நல்லுலகம்"இருந்தது என தெளிவாக சொல்கின்றது
தென்னகத்தை த்ரமிள் அல்லது த்ரமிழ என சமணர் சொல்லிகொண்டு வந்தபொழுதுதான் உருவான வார்த்தையின் திரிபு திராவிடம்
அதையும் ஒரு குறிப்பு சொல்லாக சொன்னார்களே அன்றி அவர்களின் தமிழ் இலக்கியத்தில் சொல்லவே இல்லை
சமண முனிகள் ஆங்காங்கு சங்கம் வைத்திருந்தார்கள் அப்படி தென்னக சங்கம் ஒன்றின் பெயர் திரமிள சங்கம்
அதுவும் அது கன்னடமும் தெலுங்கும் கலந்த பிரதேசத்தில் இருந்திருன்றது அவை இரண்டும் ஒரு குடும்ப மொழி, தமிழும் மலையாளமும் ஒரு குடும்ப மொழி என்றுதான் சமணர் பிரித்திருந்தனர்
அந்த ஆந்திர கன்னட பகுதியே த்ரமிள என அழைக்கபட்டது அதற்கு பாலி மொழியில் தெற்கு என பொருளில் அர்த்தம் உண்டு, அந்த பகுதியின் சமண சங்கஙம் திரமிள சங்கம் என அழைக்கபட்டது அதை இப்பாடலும் சொல்கின்றது
“ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி
லங்கேஸ்தி அருங்களா!
அன்வயோ பாதி நிஸ்ஸேஷ ஸாஸ்த்ர
வராஹி பாரஹைஹி”
இப்படி சமணர் அவர்கள் மொழியில் சொல்லி கொண்டனர் ஆனால் இலக்கியங்களில் திராவிட என எழுதவில்லை
அக்காலம் தஞ்சை கோவிலை கட்டியது யார் என கூட தெரியா அளவு கொடுங்காலம், 1300க்க்கும் 1500க்கும் இடைபட்ட காலம் அடிக்கடி ஆப்கானிய தாக்குதல் நடந்த காலம் என்பதால் பல வரலாறுகள் மறைக்கபட்டன.
பின்னாளில் மொழியினை புடுங்கி அலசுகின்றேன் என வந்த கால்டுவெல் சிக்கலை தொடங்கி எல்லா தென்னக மொழியும் திராவிட மொழி என எழுதிவைத்தான்
அவனை தொடர்ந்து இன்னும் சில வெள்ளையன் நம் வரலாறை திருத்தி நமக்கே சொல்லி கொடுத்தான்
அவனின் நோக்கம் தமிழகம் என்பது பிராமணன் உட்பட எல்லோரும் வந்தேறிய பகுதி அங்கு ஆங்கிலேயனும் கிறிஸ்தவனும் வர உரிமை உண்டு என்பதை தவிர எதுவுமில்லை
அவனின் புலம்பல் அக்காலத்தில் உள்நோக்கம் அறியாமல் படிக்கபட்டது, ஆனால் வெள்ளையனால் உள்நோக்கத்துடன் கற்பிக்கபட்டது
அதில்தான் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை "தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்"என எழுதினார்
அவரை பிடித்து திராவிட நாட்டை காட்டு என கேட்டால் சொல்ல தெரிந்திருக்காது என்பதுதான் விஷயம்
இந்த வரிசையில்தால் தாகூர் வந்தான், தாகூர் நல்ல கவிஞனா இல்லையா என்பது விஷயம் அல்ல அவன் முழு ஆங்கிலேய அடிமை என்பதுதான் விஷயம்
தமிழக பாரதியும் வங்கத்து கவிஞர்களும் மராட்டிய புலவர்களும் ஆங்கிலேயனை எதிர்த்து சிறையிலும் காடுகளிலும் அந்நிய தேசங்களிலும் பரிதவிக்க தாகூர் சுகவாழ்வில் இருந்தான்
இந்நாட்டைபற்றி அவனுக்கு கவலையே இல்லை, ஆங்கில அடிவருடியாக சுகமாக இருந்தான்
நாட்டுக்காக ஒரு துரும்பையும் அவன் கிள்ளிபோட்டவன் அல்ல, மாறாக வாழ்த்தி பாடினான்
எப்பொழுது பாடினான்?
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியா வந்தபொழுது இங்கு பெரும் பஞ்சம் நிலவிற்று, மக்கள் உண்ண வழியில்லாம இருந்தபொழுது பம்பாயில் அவனை வாசல் கட்டி வரவேற்றனர், அதுதான் இன்டியா கேட்
நாட்டில் வாஞ்சிநாதன் முதல் பலர் கொதித்து கொண்டிருக்க, அந்த மானம் கெட்ட தாகூரோ "ஜண கண மண அதி"என 40 நிமிடத்துக்கு நீட்டி முழக்கி பாடினான்
அது இந்திய தாய்க்கான பாடல் அல்ல, பாரதமாதாவுக்கான புகழாரம் அல்ல, அல்லவே அல்ல
அது பிரிட்டன் அரசனுக்கு இந்திய அடிமைகவிஞன் எழுதிய பாடல், இதனால் அவனுக்கு நோபல் பரிசு ரகசியமாக வழங்கபட்டது வேறுகதை
ஆம், தாயின் மணிக்கொடி பாரீர் என பாடிய பாரதிக்கு சிறை, வந்தே மாதரம் என பாடிய சாட்டர்ஜிக்கு சிறை
ஆனால் ஏ பிரிட்டானியனே இந்திய தாயின் புதல்வர் உன்னை வரவேற்கின்றோம் என பாடியவனுக்கு நோபல் பரிசு
இதெல்லாம் அக்கால கொடிய காட்சிகள்
பின்னாளில் சுதந்திரம் பெற்றபொழுது பாரதியின் "தாயின் மணிக்கொடி பாரீர்"எனும் பாடலும் "வந்தே மாதரம்"என்போம் பாடலுமே தேசிய கீதம் ஆகும் தகுதியில் இருந்தது
இன்றுவரை தேசிய கீதத்துக்கான தகுதி கொண்ட பாடல் அதுவே
ஆனால் பிரிட்டனின் அடியாளாக, கைகூலியாக ஆண்ட நேரு அந்த 40 நிமிட பாடலை 5 நிமிடமாக சுருக்கி தேசிய கீதமாக மாற்றினார்
இன்றும் இந்தியாவில் இல்லா சிந்துவுக்கு நாம் வாழ்த்தி கொண்டிருக்கின்றோம்
ஆம் தாகூர் ஒரு வெள்ளை அடிமை, அவன் சொன்னதை அப்படியே நம்பி பாடிய அடிமை
மனோன்மணிய சுந்தரனாரின் மேல் அதிகாரி ஒரு ஆங்கிலேயன்
இதனாலே இந்த இருவரும் உரிய ஆராய்ச்சி இன்றி சுருக்கமாக சொன்னால் வாழ்வதற்காக இல்லா திராவிடம் எனும் வார்த்தையினை சேர்த்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்
அதனை வைத்து தனியே ஒரு நாடு அடைய திட்டமிட்டான் ஈரோட்டுக்காரன், அவனுக்கு காஞ்சிபுரத்தில் இருந்து ஒருவன் துணைக்கும் வந்தான்
இவர்களிடம் வாழ வழி இல்லாமல் வந்த திருக்குவளை குடும்பமொன்று வாழ்வாங்கு வாழ்ந்தது, இன்னும் ஏராளமானோரை அரசை சுரண்டி நாட்டை கொடுத்து வாழவும் வைத்தது
மற்றபடி திராவிடம் என்பது கால்டுவெல்லின் கற்பனையில் உதித்த மாயமான், இந்திய தேசவிரோதம் செய்ய வளர்க்கபட்ட மாயமான், அந்த மாயமானை வைத்து ஆளாளுக்கு வித்தை காட்டினார்கள்
திராவிடம் என எவனெல்லாம் பாடினானோ அவனெல்லாம் ஆங்கில அடிமை
பாரதி ஆரியருக்கு எதிரானோரை பூரியர் என வள்ளுவன், கம்பன் வழியில் தூய தமிழில் பாடினான், திராவிடம் எனும் வார்த்தையினை அவன் பயன்படுத்தியதே இல்லை
காரணம் அவன் உண்மையான இந்தியனாய், தன் கவிதையிலும் பேச்சிலும் உண்மை மட்டும் சொல்ல பாரதீயனாய் இருந்தான்.
ஆங்கிலேயன் அடிபணிந்து தாகூர் வாங்கிய அந்த நோபல் பரிசு, ஆங்கிலேயனை எதிர்த்து நடந்த பாரதியின் செருப்புக்கு கூட ஈடாகாது
இங்கு யாரெல்லாம் வெள்ளையன் காலத்தில் கொண்டாடபட்டோனோ அவனெல்லாம் ஆங்கிலேய அடிவருடி என்றும் தேசவிரோதி என்றும் அறிந்து கொள்வது கடினமானது அல்ல
தாகூர் எனும் ஆங்கிலேய அடிவருடி அவ்வகையே
அமித்ஷா தாகூரை அவமதித்திருந்தால் அது மிக சரியான செயல், செய்திருப்பார் என நம்பி வாழ்த்துகின்றோம்