கொண்டாடுவோம்! ‘ஓத்திசைவு’தான், உலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே இணைய தளம்! அதுவும் தமிழ்த் தளம்!!
10/06/2020

வெற்றிகரமாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்று – ‘ஹலால்’ ஒத்திசைவு தளத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் ஹலால் ராமசாமியாருக்கு நல்வாழ்த்துகள். எங்களுக்கெல்லாம் உங்கள் தளத்தைப் படிக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு உங்கள் ஆகச்சிறந்த ஹலால் நல்லூழ்தாம் காரணமாக இருக்கவேண்டும்.
இப்படிக்கு,
(ஹலால்) 7½கள் குழுமம்.
-0-0-0-0-
…எதிர்காலத்தில், சகல விஷயங்களுக்கும் ஹலால் சான்றிதழ் தேவைப்படப் போகிறது. ஆதார் எண்ணே ஹலால் சான்றிதழ் பெற்றாகவேண்டும் நிலை வரப் போகிறது. ஆக, புலாலுக்கு மட்டுமல்ல ஹலால், கால்நடைகள் உண்ணும் புல்லுக்கும் ஹலால் வேண்டும் என்கிற நடுநிலை உச்சமடையப் போகிறது.
யேஸ்ஸூ இன்றிருந்தால், அல்லேலுயாவுக்குப் பதிலாக, ஹலாலேலுயா என்றுதானே இறைவனின் புகழைப் பாடுவார்?
பாரதி இன்றிருந்தால் பாடியிருப்பான், ‘ஹலால் நிலம் வேண்டும், அல்லாஹ், ஹலால் நிலம் வேண்டும்!’ என்று!
…இந்த நெக்குருகும் பாட்டையும் குறிப்பாக நம் அப்பாடக டக்கர் டிஎம் க்ருஷ்ணா அவர்கள் எடுத்துப் பாடி, விஸ்தாரமாக ஹலால்பனை செய்து, பரப்புரை வெச்சிசெஞ்சிருப்பார்.
நம் சாச்சா நேரு இன்றிருந்திருந்தால், தன் பெயரையே ஜவஹலால் நேரு எனப் போர்க்கால ரீதியில் சமூகநீதி கண்டு மதச்சார்பின்மையுடன் மாற்றிக்கொண்டிருப்பார். ஏன், இன்று அவருடைய கொள்ளுப்பேரரும் பேரறிஞருமான ராஹுல் அவர்களே, தன் பெயரை ராஹலால் காந்தி என மாற்றிக்கொள்ளப்போகிறாரே!
…ஆகவே, உலகமே ஹலால்மயமாக்கப்பட்டுவரும் இந்தக் காலகட்டத்தில், ஒரு அறிவுரை: கடைசி நேர கெடுபிடிகளுக்கும் தள்ளுமுள்ளுகளுக்கும் முன்னால், உங்கள் இணைய இணைப்பு, காஸ் கன்னெக் ஷன், இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துக்கும் மேலதிகமாக ஹலால் சான்றிதழ் வாங்கிவைத்துக்கொள்வது உத்தமம்.
-0-0-0-0-
நுண்குறிப்பு: சுமார் இரண்டுமாதங்கள் முன்னமேயே, கடும் போட்டிக்கிடையே உழைத்துப் போராடி, உலகத்திலேயே முதலாமவனாக இந்தச் சான்றிதழை வாங்கி, அதனைப் பெருமையாக, இந்த வலைப்பூவின் முகப்பின் வலதுபக்கத்தில் நிரம்பிவழியும் மகிழ்ச்சியுடன் பதித்தும், இன்றுதான் ஒருவர் இதனை கவனித்திருக்கிறார். வாழ்க!
வன்நுண்குறிப்பு: உள்ளபடியே சலிப்பாக இருக்கிறது, காஃபிர்களே! இப்படியா உங்கள் அனாதரவை நல்குவீர்கள்? :-(
வீராதிவீர வீரக்குஞ்சாமணிகுண்ட திராவிடர்களுக்கு ஒரு நுண்கோரிக்கை:
இந்த ஹலால் சான்றிதழில் தமிழ் மட்டுமேதான் இடம்பெறவேண்டும் ஆங்கிலம், அரபியம், பாரசீகம், உர்தூ, ஹிந்தி போன்ற மொழிகள் இடம்பெறவே கூடாது எனச் சாகும் வரை உண்ணும்விரதப் போராட்டம் ஆரம்பிப்பீர்களா?
பின்னர் சாவகாசமாக – அரபு மொழியிலல்லாமல் தூயதமிழில் மட்டும் மஸுதிகளில் இருந்து ம்யூஸ்ஸன் பாங்கு ஓதுதல், எல்லா ஜாதியினரும் இமாம்களாதல், பெண்களும் இமாமிகளாதல், புத்தம்புதிய இஸ்லாமிக் ரெலிஜியஸ் எண்டௌமெண்ட் சட்டத்தின் கீழ் அனைத்து இஸ்லாமிய மதச் சொத்துகளையும் அரசின்கீழ் கொண்டுவருதல், சமூக ஆண்களுக்கும் கண்டிப்பாக கடுங்கோடையில் சுகம் தரும் கரும் புர்க்கா அணியவேண்டியமை, தப்லீகி ஜமாஅத்தின் தலைவராக ஒரு பட்டியல் வகுப்புப் பெண்மணி தேர்ந்தெடுக்கப் படல் போன்ற ‘சாகும்வரை போராட்ட’ங்களுக்குக் குரல் கொடுக்கலாம்!
மதச்சார்பின்மையுடன் நன்றி!